பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது pt desk
குற்றம்

ஈரோடு: சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் கைது

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பணிக்கம்பாளையத்தில் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கியுள்ளதாக பெருந்துறை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

arrested

இதில் அனோவர் ஹசைன் (43), அலிசேக் (28), ஓய்யுல்லா (28), பாதிமா (22), சஞ்சுசோசன் (31), பரூக்கோசன் (35) மற்றும் முகமது மோன்ஜல் (48) ஆகியோர் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஏழு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.