குற்றம்

ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியவர் கைது

ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியவர் கைது

Rasus

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியுள்ளது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த விஷால் என்ற இளைஞரிடமிருந்து 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கொகைனை பறிமுதல் செய்தனர். இவருக்கு தென் அமெரிக்க போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.