குற்றம்

தண்ணீர் பிடிப்பதில் தகாராறு: அண்ணனைக் கொன்ற தம்பி!

webteam

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை அடித்துக்கொன்றதாக, தம்பியும், தம்பி மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. அவரது தம்பி பாலகிருஷ்ணன். இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டின் அருகில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வார்த்தை முற்றியதில் பாண்டியை அவரது தம்பி பாலகிருஷ்ணன், தம்பி மனைவி தங்கம் ஆகியோர் அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த கூமாப்பட்டி போலீஸார் பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.