Accused pt desk
குற்றம்

சென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறு - இளைஞர் குத்தியதில் கொத்தனார் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை பள்ளிக்கரணை ராஜிவ்காந்தி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (44). கொத்தனார் வேலை செய்து வரும் இவர், நேற்றிரவு மது போதையில், அதே தெருவை சேர்ந்த கூரியர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் செந்தில்குமார் (25) என்பவருடன் அநாகரீகமான வார்த்தைகளை பேசியதோடு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Murder

இதில், ஆத்திரமடைந்த செந்தில்குமார், தனது கையால் சக்திவேல் வயிற்றில் குத்தியுள்ளார். இதில், சரிந்து கீழே விழுந்த சக்திவேல் மூக்கில் இருந்த ரத்தம் வந்ததை அடுத்து அவர் மயங்கியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பள்ளிகரணை போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார், கொலை வழக்குப் பதிவு செய்து, செந்தில் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.