குற்றம்

டாஸ்மாக் பணம் ரூ.50 லட்சத்தை கொள்ளையடிக்க முயற்சி

webteam

சென்னை மத்திய கைலாஷ் அருகே டாஸ்மாக் வசூல் பணம் ரூ.50 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்யப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் அதிகாரி மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், மத்திய கைலாஷ் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மடக்கிய மர்ம நபர்கள் சிலர், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பணத்தை கொடுக்க மறுத்ததால் இருதரப்பிற்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் சண்டையை கண்டு கூடியதால், கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கொள்ளையடிக்க முயன்றவர்களை தேடி வருகின்றனர்.