குற்றம்

சென்னை: தொடர் காலணி திருட்டில் ஈடுபட்டு வந்ததாக 3 வடமாநில இளைஞர்கள் கைது

webteam

சேலையூரில் காலணிகளை திருடி வந்ததாக மூன்று வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வீடுகளில் வெளியில் இருக்கும் காலணிகளை தவழ்ந்து வந்து திருடுவதாக தொடர் புகார்கள் வந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒருவர் தவழ்ந்து வந்து காலணிகளை திருடிச் செல்வது தெரியவந்தது.

இது தொடர்பாக சேலையூர் போலீசார். வழக்குப்பதிவு செய்து விகாஷ் குமார், ரோகித்குமார், அருள் எப்ரின் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் அதே பகுதியில் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும், இரவு நேரங்களில் காலணிகளை திருடி பல்லாவரம் சந்தையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சேலையூர் போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.