குற்றம்

பணமோசடி வழக்கு: நடிகர் ’தாடி’ பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

பணமோசடி வழக்கு: நடிகர் ’தாடி’ பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்!

webteam

பண மோசடி வழக்கு தொடர்பாக, நடிகர் ’தாடி’ பாலாஜி திருப்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

திருப்பூரில் கடந்த 2014ஆம் ஆண்டு ஏ.டி.எம்-மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டதாக, தனியார் செக்யூரிட்டி நிறுவன மேலாளர் பரதன் புகார் அளித்திருந்தார். அதில், விஷ்ணுவர்தன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், கையாடல் செய்த பணத்தில், கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக நடிகர் பாலாஜிக்கு 5 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. 
நிகழ்ச்சியை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்தாததோடு பாலாஜி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் ’தாடி’ பாலாஜி இன்று ஆஜரானார்.