குற்றம்

சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: கட்டட தொழிலாளி கைது

webteam

சென்னையில் சிறுமி ஒருவரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சசிகுமார், சென்னையில் தங்கி கட்டட வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெற்குன்றத்தை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் பழக்கம் எற்படுத்தி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவர் மனதை கவர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் சென்னை கோயம்பேட்டில் வசித்து வரும் 10 வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மாணவியை சசிக்குமார் ஏமாற்றியதால், ஆசிட் குடித்து தற்கொலைக்கு அவர் முயன்றார். மாணவியின் கருவில் இருந்த குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் மாணவியின் பெற்றோர் புகாரில் சசிக்குமாரை கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.