குற்றம்

சென்னை: 6வது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி !

jagadeesh

சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். சைக்கிளில் சென்று டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ரியாஸ் (15). இன்று பாரிமுனை அரண்மனைகாரன் தெருவில் வீடுகட்டுமான பணி நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு சிறுவன் ரியாஸ் டீ கொண்டு சென்றார்.

கட்டுமான தொழிலாளர்களிடம் டீ விற்று விட்டு 6-வது மாடியில் இறங்கி சென்ற போது தவறி மேலே இருந்து கிழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் ரியாஸ் பலியானார். தகவல் அறிந்த எஸ்பிளனேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டேன்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவன் விழுந்து பலியான சம்பவத்தில் கட்டடத்தின் உரிமையாளர் சாகுல் ஹமீது மீது எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உரிமையாளர் அனுமதியின்றி கட்டடம் கட்டி அஜாக்கிரதையாக செயல்பட்டு இருந்த காரணத்தினால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தகவல்.