குற்றம்

4 ஆண்டுகளாகப் பள்ளி மாணவிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை : கோவையில் கொடூர சம்பவம்

webteam
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த மாணவியைக் கடந்த சில மாதங்களாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் 10 பேர் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகப் புகார் எழுந்தது. அதனையடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். ஆகவே அவரைக் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 
 
 
மருத்துவமனை நிர்வாகம் தரப்பிலிருந்து மாணவியின் நிலைமை குறித்து புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் இறங்கினர். அதனைத் தொடர்ந்து 4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேரை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
கைது செய்யப்பட்டவர்கள் சந்தோஷ், கார்த்திக், தனசேகர் எனத் தெரிய வந்துள்ளது.  இவர்கள்  2016 ஆம் ஆண்டு முதல் இந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை போலீசார்  4 பள்ளி மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்துள்ள நிலையில் மேலும் இதில் தொடர்புடைய 3 பேரைத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியை மேலும்  பரபரப்பாகி உள்ளது.