Murder case pt desk
குற்றம்

சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு - திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேர் கைது

webteam

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய சேலம் மாநகர போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இன்று காலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் சண்முகத்தின் உடலை வாங்க மறுத்து உறவினர்களும், அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Arrested

“இந்த கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும். கூலிப்படையை ஏவிய திமுக பிரமுகர் சதீஷை கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கொலை குற்றவாளிகளை கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் திமுக பிரமுகர் சதீஷ் உட்பட 9 பேரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திமுக கவுன்சிலர் தனலட்சுமி கணவர் சதீஷ் (48), அருண்குமார் (28), முருகன் (23), பாபு (45), சீனிவாசன் (25), பூபதி (25), கருப்பண்ணன் என்ற சந்தோஷ் (31), கௌதமன் (33), நவீன் (25) ஆகிய 9 பேர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் திமுக பிரமுகர் சதீஷ் ஈடுபட்டு வந்ததாகவும், அதை அதிமுக நிர்வாகி சண்முகம் போலீசில் புகார் கொடுத்ததால் ஆத்திரத்தில் கூலிப்படை மூலம் சதீஷ் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.