சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் குடும்பத்துடன் கைது  pt desk
குற்றம்

ஓசூர்: கர்நாடக எல்லையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் குடும்பத்துடன் கைது

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் ஒருவர் குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், ஆனேக்கல் தாலுக்காவிற்கு உட்பட்ட ஜிகினி என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போலி ஆவணங்களுடன் கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த பகுதியில் இவர்கள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர் குடும்பத்துடன் கைது

ரஷித் அலி சித்திக் என்ற அந்த பாகிஸ்தானியர், வங்கதேசத்திற்கு சென்று அந்நாட்டை சேர்ந்த ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு வந்து போலி ஆவணங்களுடன் தங்கி இருந்துள்ளார். இவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.