Gold seized file
குற்றம்

சிங்கப்பூர் டூ கோவை: விமானத்தில் கடத்திவரப்பட்ட 1 கிலோ தங்கம் பறிமுதல்

webteam

செய்தியாளர்: சுதீஷ்

கோவையில் இருந்து நாள்தோறும் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அச்சேவையை பயன்படுத்தும் பயணிகளிடம், ‘சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தொடர்பான சோதனை’ தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. அப்படி நேற்றும் கோவை விமான நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை பன்னாட்டு விமான நிலையம்

அப்போது, பயணி ஒருவரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ரூ.73,80,000 மதிப்புள்ள 1 கிலோ எடையுள்ள தங்கக் கட்டியை கைப்பற்றினர். இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அப்பயணி சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு ஸ்கூட் விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.