கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் மேலும் 1949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

EllusamyKarthik

தமிழ்நாட்டில் இன்று 1,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 2011 பேர் நோய் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 20,117 பேர் உள்ளனர் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் 189 பேர், கோவையில் 226 பேர், ஈரோட்டில் 154 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது.