கொரோனா வைரஸ்

கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் கொடிகள் விற்பனை சரிவு

Sinekadhara

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளநிலையில், இந்த ஆண்டும் கொரோனா சூழலால் தேசியக் கொடிகள் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

வழக்கமாக குடியரசு தினம், சுதந்திர தின விழா நாட்களில் பல அளவிலான தேசியக் கொடிகள், மூவர்ணத் தொப்பிகள் போன்றவற்றின் விற்பனை அதிகரித்திருக்கும். ஆனால், கொரோனா சூழலால், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லுரிகள் மூடப்பட்டுள்ளதால் தேசியக் கொடிகளின் விற்பனை பெரிதும் குறைந்துள்ளதாகக் கூறுகிறார்கள் வியாபாரிகள்.