கொரோனா வைரஸ்

வேலூர்: கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

webteam

வேலூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட விருபாட்சிபுரத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். அதிகபடியான மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலை வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். 75 வயது முதியவர் இறந்த பிறகே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவருக்கு பயண விவரம் ஏதும் இல்லை. கொரோனா வைரஸ் பாதித்த நபர் வசித்த பகுதி முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் அறிவித்த கணக்குபடி இதுவரை வேலூரில் 5 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் மட்டும் வேலூர் மாவட்டத்தில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் 81 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.