சினிமா

நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்!

நிறத்தைக் காரணம் காட்டி நடிக்க மறுத்த ஹீரோயின்: இயக்குனர் தகவல்!

webteam

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. காமெடி, குணசித்திரம், வில்லன் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ள அவர், 2016- ஆம் ஆண்டு மார்ச் மாதம் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆட்டோ டிரைவராக இருந்து மிமிக்ரி மூலம் வளர்ந்து நடிகரானவர் கலாபவன் மணி. அவரது வாழ்க்கை கதை இப்போது சினிமா வாகியுள்ளது. இதை பிரபல இயக்குனர் விநயன் இயக்கியுள்ளார்.

இவர் தமிழில் காசி, என் மனவானில், நாளை நமதே படங்களை இயக்கியவர். கலாபவன் மணியின் வாழ்க்கைக் கதை படத்துக்கு ’சாலக்குடி காரன் சங்கதி’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் கலாபவன் மணியாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் ராஜாமணி நடித் துள்ளார். ஹீரோயினாக ஹனி ரோஸ் நடித்துள்ளார். படம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் கலாபவன் மணியின் பலம் மற்றும் பலவீனங்களையும் பல தெரியாத தகவல்களையும் சொல்லியிருப்பதாக விநயன் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘கலாபவன் மணி, ஒரு மலையாள படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். அவர் ஜோடியாக நடிக்க பிரபல மாக இருந்த ஹீரோயின் ஒருவரிடம் கேட்கப்பட்டது. அவர் நடிக்க மறுத்திருக்கலாம். ஆனால், மணியின் நிறத்தைக் குறிப்பிட்டு அவருடன் நடிக்க மறுத்தார். இதைக் கேள்விபட்டு மணி வருந்தியது எனக்குத் தெரியும். இந்த சம்பவத்தை படத்தில் வைத்திருக்கிறோம். கதைப்படி, தெலுங் கில் டாப் ஹீரோயினாக இருக்கும் கவிதா, இப்படி சொல்கிறார். அவர் அப்படிச் சொன்னாலும் அவருக்காக பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கிறார் மணி என்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. மணியுடன் நடிக்க மறுத்த நடிகை யார் என்பது படத்தைப் பார்த்தால் புரியும்’ என்று கூறினார்.