சினிமா

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு

ரஜினிக்காக 234 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பேன்: விஷால் அறிவிப்பு

webteam

நடிகர் ரஜினியின் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர கலைவிழாவிற்காக நடிகர் விஷால் மலேசியா புறப்பட்டு சென்றார். அதற்காக விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறியுள்ளார். கூடிய விரைவில் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் அறிவித்து சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இது நல்ல விஷயம். ஒரு தலைவன் அரசியலில் இறங்கி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது சமூக சேவை செய்வதற்கான இடம். அதற்கான மிகப் பெரிய பாதையை ரஜினி காட்டுவார் என்று நம்புகிறேன். அந்த வகையில் ரஜினியின் தொண்டனாக எல்லா தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன்'' என தெரிவித்தார்.

ரஜினியில் தொண்டனாக 234 தொகுதிகளுக்கும் சென்று வாக்கு சேகரிப்பேன் என்று விஷால் கூறியிருப்பதால் அவர் விரைவில் ரஜினியின் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.