சினிமா

இயக்குநர் வசந்தின் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு சூர்யா பாராட்டு!

Veeramani

இயக்குநர் வசந்த்தின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல்சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு கிடைத்துள்ள மனதுக்கு இதமான வரவேற்பை கண்டு மிக்க மகிழ்ச்சி... படத்தை மிகவும் விரும்பி பார்த்து ரசித்தேன். வசந்த் சாரின் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதல் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் பிரதிபலிக்கிறது. வசந்த் சாருக்கும், அனைத்து நடிகர்கள் மற்றும் குழுவினருக்கும் வணக்கங்கள்என தெரிவித்திருக்கிறார்.