சினிமா

சுசி லீக்ஸ்: மன்னிப்புக் கேட்டார் சுசித்ரா

webteam

தன்னுடைய பெயரில் வெளியான டிவிட்டர் பதிவுகளுக்கு பாடகி சுசித்ரா மன்னிப்பு கோரியுள்ளார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகி சுசித்ரா, தன்னுடைய டிவிட்‌டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு‌ அதில் வெளியான பதிவுக‌ளால் மன‌நலம் ‌பாதிக்கப்பட்டதாகவும் தற்போது தான் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

தன் பெயரில் வெளியான பதிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மன்னிப்பு கோரி இருக்கும் சுசித்ரா, ‌திரையுலக நண்பர்கள் தன் நட்பை கைவிடமாட்டார்கள் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தனக்கு ஏற்பட்ட நிலைமை எதிரிக்கு கூட ஏற்படக் கூடாது என நினைப்பதாகவும்‌ சுசித்ரா தெரிவித்துள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு சுசித்ராவின்‌ டிவிட்டர் பக்கத்தில்‌ திரையுலக நட்சத்திரங்களின் ஆபாச படங்கள் வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.