சினிமா

சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2வில் காட்டுவதா? ராஜமவுலி

webteam

காவிரி விவகாரத்தில் சத்யராஜ் மீதுள்ள கோபத்தை கன்னட அமைப்புகள் பாகுபலி -2 திரைப்படத்தின் மீது காட்டுவது முறையாகாது என அதன் இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாகவும் அதனால், அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கன்னடத்தில் வெளியிட விட மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் கூறியிருந்தன. இதுபற்றி பாகுபலி 2 படத்தின் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்டபோது, சத்யராஜ் கன்னட அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் அவர் நடித்த பாகுபலி ஒன்று உள்ளிட்ட பல படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட்டதாகவும் கூறினார்.