சினிமா

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகும் முதல் திரைப்படம்!

webteam

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது பெயரில் தொடங்கியுள்ள ப்ரொடக்‌ஷன் கம்பெனியின் முதல் படத்தை பூஜை போட்டு தொடங்கியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், 'சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தில் அவரே நடிக்கிறார். இந்தப் படத்தை கபாலியில் நெருப்புடா, நெருங்கடா பாடலை எழுதிய பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்க, திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்தப்படம் மகளிர் கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு உருவாகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் பெண்ணுக்கும், தந்தைக்கும் இடையேயான கதையை விளக்கும் வகையில் படமாக்கப்படுகிறது.