சினிமா

“தடைகளை தாண்டி ‘நாடோடிகள்2’ முடிந்தது” -சசிகுமார் ட்வீட்

webteam

‘நாடோடிகள்2’ வில் சசிகுமாரின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நாடோடிகள்’. தமிழ் சினிமாவின் லேண்ட் மார்க் ஃபிலிம் என பலரும் இதனை பாராட்டினர். இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரிய சாதனை வசூலை ஈட்டியது. ஆகவே அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என பல இடங்களில் பலர் கோரிக்கை எழுப்பினர். மேலும் அந்தப் படக் குழுவை தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிக் கூட்டணியாக பலரும் பார்த்தனர். 

அந்த வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தீர்மானித்தார் இயக்குநர் சமுத்திரக்கனி. அதையொட்டி நடிகர் சசிகுமார், சமுத்திரகனி, பரணி, நமோ நாராயணன், எம்.எஸ்.பாஸ்கர், ஞானசம்பந்தம் என கூட்டணி மீண்டும் இணைந்தது. ‘நாடோடிகள்2’ படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது. இப்படத்தின் முதல் பாகம் ராஜபாளையம் சுற்று வட்டாரத்தை சுற்றி படப்பிடிப்புக்கள் நடைபெற்றன. ஆகவே அதே பகுதிகளில் இரண்டாம் பாகமும் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “எல்லா முரண் மற்றும் தடைகளை தாண்டி ‘நாடோடிக2’ படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. என்ன ஒரு சிறப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.