சினிமா

விஜய்சேதுபதி படத்திலிருந்து விலகும் சமந்தா? இந்த நல்ல செய்திதான் காரணமா?

rajakannan

விஜய்சேதுபதி படத்தில் இருந்து நடிகை சமந்தா வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்தக் கூட்டணியில் ஏற்கெனவே ‘நானும் ரௌடிதான்’ திரைப்படம் ஹிட் அடித்தது. அந்த வரிசையில் தற்போது புதிய படத்திற்காக இவர்கள் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் மற்றொரு ஹீரோயினாக சமந்தாவும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கான படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. தற்போது, அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஆனால், தற்போதைய தகவலாக இந்தப் படத்தில் இருந்து சமந்தா வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடிகை சமந்தா தற்போது கர்ப்பமாக உள்ளதாகவும், குழந்தை பெறுவதை கருத்தில் கொண்டு இந்தப் படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களில் இருந்தும் அவர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றன.

இருப்பினும், சமந்தாவோ அவரது காதல் கணவர் நாக சைதன்யாவோ இதுவரை கர்ப்பம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சமந்தா - நாக சைதன்யா, கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.