நடிகர் தனுஷ் web
சினிமா

ராயன் வெற்றி.. NEEK-க்கு பிறகு 4வது படத்தை இயக்கும் தனுஷ்.. ஹீரோ இவரா? காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Rishan Vengai

தமிழ்திரையுலகில் 25வது படம் மற்றும் 50வது திரைப்படம் இரண்டையும் ஹிட் கொடுத்த ஒருசில ஹீரோக்களில் தன்னுடைய பெயரையும் முத்திரை பதித்த தனுஷ், இயக்குநராக 4வது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷின் 50வது படமான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.150 கோடி வசூலை அள்ளியது. அவரே நடித்தது மட்டுமில்லாமல் ராயன் திரைப்படத்தை இயக்குநராகவும் மாறி டைரக்ட் செய்திருந்தார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில், தனுஷ் இயக்கம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்கில் வெளியான ராயன் வசூலில் சக்கைப்போடு போட்டது.

தனுஷ்

இந்நிலையில், ராயனுக்கு பிறகு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற காதல் திரைப்படத்தை இயக்கிவரும் தனுஷ், இயக்குநராக தன்னுடைய 4வது படத்தின் வேலைக்கான அடித்தளத்தை போட்டுள்ளார். தனுஷ் இயக்கும் 4வது திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அருண் விஜயை இயக்கும் தனுஷ்..

தற்போது ‘குபேரா’ படத்தில் கவனம் செலுத்தி வரும் தனுஷ், இயக்குநராக மட்டுமே பணிபுரிந்து வரும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதற்கிடையில் இயக்குநராக தன்னுடைய 4வது திரைப்படத்தில் நடிகர் அருண் விஜயை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப்படத்தில் தனுஷும் சேர்ந்து நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தனுஷ் - அருண் விஜய்

இந்த அறிவிப்புக்கு முன்னர் திருச்சிற்றம்பலம் படத்தில் பணிபுரிந்த நித்யா மேனனை வைத்து இன்னொரு திரைப்படத்தை தனுஷ் இயக்கவுள்ளார் என்றும் கூறப்பட்டது. அதனை நடிகர் பிரகாஷ் ராஜும் உறுதிப்படுத்திய நிலையில், தற்போது 4வது படத்தின் ஹீரோ அருண் விஜய் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டணி இணையும் ஒரே படம்தான் இதுவா என்ற தகவல் உறுதிப்பட தெரியவில்லை. எப்படி இருப்பினும் நடிகராக உச்சம் தொட்ட தனுஷ் இயக்குநராகவும் ஒரு இன்னிங்ஸ் ஆடவுள்ளார்.