சினிமா

ரசூலை இம்சைப்படுத்திய சவுண்ட்

webteam

ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் என்ஜினீயர் ரசூல் பூக்குட்டி, இந்திப் படங்களில் பணியாற்றி வருகிறார்.

தமிழில், ரெமோ படத்துக்கு சவுண்ட் என்ஜினீயராகப் பணியாற்றினார். இப்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தில் பணியாற்றி வருகிறார். ஹைதராபாத்தில் நடக்கும் ஐஃபா விழாவை முன்னிட்டு, தெலங்கானா மாநில சுற்றுலாத் துறையின் சார்பில் ஐடி ஹப்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் ரசூல் பூக்குட்டியும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானும் உரையாட, அவர்களிடம் ஐடி ஹப்பை சேர்ந்த இளம் தொழில்முனைவோர் கேள்வி கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வரவேற்றுப் பேசியவர், பேசி முடித்துவிட்டு, ரசூல் பூக்குட்டியிடம் மைக்கை கொடுத்தார். ரசூல், பேச ஆரம்பிக்க மைக் தகராறு செய்தது. சவுண்ட் என் ஜினீயரான ரசூல் மைக்கை இரண்டு மூன்றுமுறை அங்கும் இங்கும் அசைத்தும் க்ர்ர்ரென சத்தம் எழுப்பிக்கொண்டேயிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவிக்க, அருகில் இருந்த ஏ.ஆர்.ரகுமான் சவுண்ட் சிஸ்டத்தைக் கவனிப்பவரிடம், எதையோ அணைக்க சொல்ல, இப்போது வேலை செய்தது மைக். கூட்டத்தில் பறந்தது கிளாப்ஸ்.