சினிமா

ரசிகர்களுடன் புகைப்படம்: ரஜினிகாந்த் முடிவு

ரசிகர்களுடன் புகைப்படம்: ரஜினிகாந்த் முடிவு

Rasus

ஏப்ரல் 11-ஆம் தேதி ரசிகர்கள் தன்னுடன் புகைப்படும் எடுக்கும் நிகழ்வு நடைபெறுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்தித்து பேசினார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய அழைப்பை ஏற்று இங்கு வந்த மலேசிய பிரதமருக்கு நன்றி கூறினார். கபாலி படப்பிடிப்பிற்கு மலேசிய அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்கியது என்றும் தெரிவித்தார்.

ஏப்ரல் 11-ஆம் தேதி ரசிகர்கள் தன்னுடன் புகைப்படும் எடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது என்ற ரஜினி, இதுதொடர்பாக ஏப்ரல் 2-ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். முன்னதாக, அவரது செய்தி தொடர்பாளர் சந்திப்பு ஏதும் இல்லை என்று மறுத்திருந்தார்.