சினிமா

பிரபு சாலமனின் ’காடன்’ படத்துக்காக 50 நாள் ஒர்க்‌-ஷாப்பில் ராணா!

webteam

பிரபுசாலமன் இயக்கும் படத்துக்கு தமிழில் ’காடன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

’தொடரி’ படத்துக்குப் பிறகு மூன்று மொழியில் உருவாகும் படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படம், ’ஹாத்தி மேரே சாத்தி’யின் ரீமேக். இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. படத்துக்கு இந்தியில் ’ஹாத்தி மேரே சாத்தி’, தமிழில் ’காடன்’, தெலுங்கில் ’ஆரண்யா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

ராணா, விஷ்ணுவிஷால், புல்கிட் சாம்ராட், ஸோயா ஹூசைன், கல்கி கோயச்சின் உட்பட பலர் நடிக்கின்றனர். யானைக்கும் மனிதனுக்கும் உறவை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்துக்காக 50 நாள் ஒர்க் ஷாப் நடத்தியிருக்கிறார் பிரபு சாலமன். யானையை பற்றி புரிந்துகொள்வதற்காக நடந்தப்பட்ட இந்த ஒர்க்‌ஷாப்பில் நடிகர் ராணா கலந்துகொண்டுள்ளார்.  ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு முடிந்துள்ளது.