சினிமா

கமல் பாணியில் பிரபுதேவா - மீண்டும் ஒரு பேசும்படம்

webteam


இயக்குனர் கார்த்திக்சுப்புராஜ் சத்தமில்லாமல் ஒரு படத்தையே இயக்கி முடித்துள்ள நிலையில், பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் அந்த படத்திலும் வசனமே இல்லாமல் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மெர்குரி என்று படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் நாயகனாக நடித்து வரும் பிரபுதேவா நெகட்டிவான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறைவி படத்தில் தயாரிப்பாளர்களை மோசமானவர்களாக சித்தரித்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நாளாக படத்தை எடுக்காமல் ஒதுங்கியிருந்த கார்த்திக் சுப்புராஜ் சத்தமில்லாமல் பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். இன்னும் ஒரு சில காட்சிகளே மீதமுள்ள நிலையில், இந்த படத்தை வித்தியாசமான முயற்சியாக வசனமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை "பேசும்படம்" என்ற திரைப்படத்தின் மூலமாக செய்துள்ளார். அப்படி பார்த்தால் இந்த படம் தமிழ்திரையுலகின் இரண்டாவது கலர் ஊமைப்படம்.