சினிமா

முதல் மேடைப் பேச்சில் ஆராத்யா.. பேத்தியை பார்த்து நெகிழ்ந்துபோன அமிதாப் பச்சன்.!

webteam

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஜஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் தம்பதியின் மகள் ஆராத்யா பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தங்கள் மகளின் முதல் மேடைப் பேச்சைக் கேட்பதற்காக அபிஷேக்கும் ஐஸ்வர்யா ராயும் பள்ளிக்குச் சென்றிருந்தனர். ஆராத்யாவின் பேச்சை அவர்கள் செல்போனில் படம்பிடித்தனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராத்யா பேசியிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் ஷாரூக்கானும் தமது மொபைலில் ஆராத்யாவின் பேச்சை பதிவு செய்தார். இந்த நிலையில் பேத்தியின் பேச்சால் பெருமை கொள்வதாக அமிதாப் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.