சினிமா

பரியேறும் பெருமாள் படப்பிடிப்பு நாளை ஆரம்பம்..!

webteam

கபாலி பட இயக்குநர் பா.இரஞ்சித் முதன்முறையாக தயாரிப்பில் களம் காணப் போகும் படம் பரியேறும் பெருமாள். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது.

புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாயகன் கதிர், நாயகி கயல் ஆனந்தி நடிக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. தங்க மீன்கள் பட இயக்குனர் ராமின் உதவியாளரே மாரி செல்வராஜ். இயக்குனராக களமிறங்கியுள்ள இவர் ஒரு கதையாசிரியர். சிறுகதைகள் மூலம் பிரபலமான மாரி செல்வராஜ், திரையில் கால் பதிக்கும் முதல் படம் ‘பரியேறும் பெருமாள்’.

திருநெல்வேலி மண் மணத்துடன், அழகான காதல் கதையாக இப்படம் உருவாகவுள்ளது என்கின்றனர் படக்குழுவினர். திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர் மாரி செல்வராஜ். அவரது படத்திலும் திருநெல்வேலி தமிழுடன் யதார்த்தமான கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது. இதற்காக திருநெல்வேலியை நோக்கி புறப்பட்டது படக்குழு. மாரி செல்வராஜ் எழுதிய கதையே படமாக உருவாகிறது.