சினிமா

அக்.6 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

அக்.6 முதல் புதிய படங்கள் வெளியாகாது: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

Rasus

கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், தமிழ் அல்லாத மற்ற மொழி திரைப்படங்களுக்கு 20 சதவிகிதமும் உள்ளாட்சி கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. செப்டம்பர் 27 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி அக்டோபர் 6-ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்படத்துறையில் ஏற்கெனவே பைரஸி முதற்கொண்டு சமீபத்தில் விதிக்கப்பட்ட 18%, 28% ஜி.எஸ்.டி., என பல்வேறு காரணங்களால் பெருத்த இழப்பினை தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகிறார்கள். தற்போது விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரி தயாரிப்பாளர்கள் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. எனவே திரையரங்கு கட்டணத்தினை முறைப்படுத்தி, கேளிக்கை வரியை தமிழ் படங்களுக்கு முற்றிலும் விலக்கிட வேண்டுமென்று அரசிற்கு வேண்டுகோள் விடுக்கிறோம். அதனால், வருகிற வெள்ளிக்கிழமை 6ஆம் முதல் புதிய தமிழ் திரைப்படங்களை வெளியிடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.