nayanthara pt
சினிமா

ட்விஸ்ட்..! ஆர்.ஜே.பாலாஜி இல்லை.. மூக்குத்தி அம்மன் 2-க்கு புக் ஆன புது இயக்குநர்! வெளியான அறிவிப்பு

நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் யார் உள்ளிட்ட முழு விவரத்தை பார்க்கலாம்.

யுவபுருஷ்

ஆர்.ஜே பாலாஜி, என்.ஜெ சரவணன் ஆகியோர் இயக்கத்தில் நயன்தாரா அம்மனாக நடித்த படம்தான் மூக்குத்தி அம்மன். கடவுளின் தூதனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட போலி சாமியாருக்கும், பெண் தெய்வமாக வந்த நயன்தாராவுக்கும் இடையேயான மோதல்தான் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை. அம்மனாக நயன்தாரா கலக்க, காமெடியையும் வெகுளித்தனத்தையும் அள்ளித்தூவியிருந்தார் ஆர்.ஜே பாலாஜி.

ஊர்வசியின் எதிர்த்தமான அம்மா பாத்திரமும் எமோஷலனாக கனெக்ட் ஆகியிருக்கும். கிரிஷ் இசையமைக்க Vels Film International படத்தை தயாரித்திருந்தது. நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படியாக இருக்க, படத்தின் 2ம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது தயாரிப்பு நிறுவனம். இதிலும், நயன்தாராவே அம்மனாக வருவதாகவும் உறுதி செய்திருந்தது. ஆதன்படி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவெனில், நகைச்சுவையாக பேய் படங்களை எடுத்து கலக்கியவர் இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு பேயை அழகாக காட்டும் நபரும் இவர்தான், அதே பேயை க்ளைமேக்ஸில் கிளாமராக ஆட வைப்பவரும் இவர்தான்.

இதிலிருந்தே தெரியவில்லையா யாரைச் சொல்ல வருகிறேன் என்று. ஆம், பலருக்கும் பிடித்தமான இயக்குநராக மிளிரும் சுந்தர்.சி தான் இந்த பெருமைகளுக்குச் சொந்தக்காரர்.

‘கைய கொடு பங்கு’ என்ற பாணியில், கமர்ஷியல் ரசிகர்களின் மன்னனாக திகழும் சுந்தர் சியை இப்படத்தில் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடையவதாக தெரிவித்துள்ளது Vels Film International. விரைவில் பட வேலைகள் துவங்கும் என்று தெரிகிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயமே, சுந்தர் சி-க்கு இப்படத்தை இயக்குவதற்காக 12 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக இருக்கும் தகவல்தான்.

முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை த்ரிஷாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால், மீண்டும் நயன் தாரா உடன் இணைந்தே மூக்குத்தி அம்மன் படத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் அடுத்த ட்விஸ்ட் ஆக சுந்தர் சி இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. த்ரிஷாவை வைத்து வேறொரு படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாக ஒரு தகவல் உலாவுகிறது.