மாரி செல்வராஜ், வாழை புதிய தலைமுறை
சினிமா

’வாழை’ | ஓடிடியில் ரிலீஸ் எப்போது?.. வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு!

Prakash J

’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’, ’மாமன்னன்’ போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் 'வாழை' என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்திருந்தனர். இது, வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தைப் பார்த்த பலரும் தங்களுடைய கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டனர். இப்படத்தை அமெரிக்காவில் பார்த்து மகிழ்ந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ”உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலை பேசும் வகையில் ’வாழை’ திரைப்படம் இருக்கிறது” எனச் சொல்லி இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அவருடைய பதிவுக்கு மாரி செல்வராஜும் நன்றி தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: மீண்டும் பணி அழுத்த மரணம்| லக்னோ வங்கி ஊழியர் மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு - எழும் கேள்விகள்!

இந்த நிலையில், ’வாழை’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படம் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் செப்டம்பர் 27 எனக் கூறப்பட்ட வந்த நிலையில், தற்போது பல மொழிகளில் வெளியாகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதையும் படிக்க: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்| அனுபவ சான்றிதழ் கேட்டதற்காக 3 மாத சம்பளம் கேட்ட நிறுவனம்!