சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் மாதவன்?

webteam

காற்றுவெளியிடை படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள படத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தில் நடிக்க மாதவன் உள்ளிட்ட ஐந்து நாயகர்களிடம் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளதால் மாதவன் ஒப்பந்தமாவது உறுதியாகி இருக்கிறது எனக் கூறப்படுகிறது. ’இது ரொமாண்டிக் படமாக இருக்காது. இந்த முறை மணிரத்னம் வித்தியாசமான கதைக்களத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் இரு நாயகர்கள் நடிக்க இருக்கின்றனர்’ என்கிறது படக்குழு. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்தின் பணிகள் வரும் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது.