சினிமா

அருள்நிதியுடன் அரசியல் களத்தில் குதிக்கும் இயக்குநர் கரு.பழனியப்பன்

webteam

கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்க உள்ள படத்திற்கு ’புகழேந்தி எனும் நான்...' என தலைப்பிடுள்ளனர்.


வெளிப்படையாகவும், அழுத்தமாகவும் அரசியல், மற்றும் பொதுப்பிரச்னைகளை விமர்சித்து வருபவர் இயக்குநர் கரு.பழனியப்பன். தற்போது கள்ளன் படத்தில் நாயகனாக நடித்து வரும் அவர், அருள்நிதி நடிக்க உள்ள புகழ்ழேந்தி எனும் நான் படத்தை தொடங்க இருக்கிறார். இந்தப்படம் முழுக்க முழுக்க அரசியல் பேச இருப்பதாக ஏற்கெனவே அருள்நிதி தெரிவித்து இருந்தார். முதல்வன் பாணியில் கரு.பழனியப்பன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. காட்டமான அரசியல் டயலாக்குகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. ’பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது பெயரைக்கூறி விட்டு எனும் நான்..’ எனக்கூறுவது வழக்கம். இந்த வார்த்தைகள் சமீபகால அரசியலில் மிகப்பிரபலமாக வலம் வருகிறது. இதனை மனதில் கொண்டு இப்படத்திற்கு புகழேந்தி எனும் நான் எனப் பெயரிட்டுள்ளனர். அதேபோல் முதல்வன் படத்தில் நடித்த அர்ஜூன் கதாபாத்திரத்தின் பெயர் புகழேந்தி. 


இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.