ஜெயம் ரவி முகநூல்
சினிமா

’தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க; அவங்க..’- பாடகியுடனான பழக்கம் குறித்து ஜெயம் ரவி பதில்!

கெனிஷா என்ற பாடகிக்கும் ஜெயம் ரவிக்கும் தொடர்பு இருப்பதாக கூறிய நிலையில் இது குறித்துஜெயம் ரவி விளக்கமளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்தில் நடிகர் ஜெயம்ரவி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழப்போவதாக தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

அதில், ” ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த ஆர்த்தி, ” இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்து அவராகவே (ஜெயம் ரவியை குறிப்பிட்டு) எடுத்த முடிவே..இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நடிகர் ஜெயம் ரவிக்கும் கெனிஷா பிரான்சிசுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம்தான், இவர்களின் விவாகரத்திற்கான முடிவாக இருக்கும் என இணையதளத்தில் வதந்தி பரவ ஆரம்பித்தது.

இந்நிலையில், இதற்கு விளக்கமளித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி,

அதில், “இந்த விஷயத்தில் ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீர்கள். ஏதேதோ பெயரையெல்லாம் சொல்லி ஏதேதோ செய்கிறார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர் அவர்கள்.

வருங்காலத்தில் நானும் கெனிஷாவும் சேர்ந்து ஹீலிங் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம் .என்னையும் கெனிஷாவையும் தவறாக பேச வேண்டாம் .அதை யாரும் கெடுக்காதீர்கள் அதை யாராலும் கெடுக்கவும் முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.