சினிமா

கலகலப்பு 2 படப்பிடிப்பு நிறைவடைந்தது

webteam

கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளது. அதில் பங்கு கொண்டு நடித்த நடிகர், நடிகைகள் பிரியா விடை பெற்றனர். 

சுந்தர். சி இயக்கும் கலகலப்பு 2 படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் 4ம் தேதி காரைக்குடியில் தொடங்கி 15 நாட்கள் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காசியில் நடந்தது. இதனையடுத்து இந்தூர், புனே மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்றது. ஒட்டுமொத்த படப்பிடிப்பும் டிசம்பர் இரண்டாம் வாரத்துடன் நிறைவடையும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபில் சிட்டியில் நடைபெற்று வந்தது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் ட்விட்டரில் செய்தி இட்டுள்ளனர். மேலும் படக்குழுவினர் அனைவரும் பிரியா விடை பெற்ற புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

கலகலப்பு 2ஆம் பாகத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, ராதாரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம்புலி, வையாபுரி, சந்தானபாரதி, அனுமோகன் ஆகியோர் நடிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு கலகலப்பு முதல் பாகம் முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகியிருந்தது. அந்தப்படம் வசூலில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.