சினிமா

விஜய்க்காக சீமான் சொன்ன கதையில் ஜி.வி.பிரகாஷ்!

விஜய்க்காக சீமான் சொன்ன கதையில் ஜி.வி.பிரகாஷ்!

webteam

தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் ஹீரோக்களில் முதலிடத்தில் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். பல்வேறு படங்களை கையில் வைத்துள்ள அவர் பரம்பரமாய் சுழன்று படப்பிடிப்புகளில் கலந்து வருகிறார். நாச்சியார், செம என பல படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷை தற்போது இயக்குநரும், அரசியல்வாதியுமான சீமான் இயக்க இருக்கிறார். கோபம் என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் அரசியல் பேசப் போகிறாராம் சீமான். இந்தக் கதையை இளைய தளபதிவிஜயிடம்தான் சொல்லி கால்ஷீட் கேட்டிருந்தாராம் சீமான். அவரது கால்ஷீட் கிடைக்காததால் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கவிருக்கிறார் சீமான்.