சினிமா

திலீப், 5-வது முறையாக ஜாமின் மனு

webteam

நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள ஹீரோ திலீப்.

கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் வழங்க கோரி அங்கமலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். விசாரித்த அங்கமலி நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.
ஜாமின் கோரி திலீப் தாக்கல் செய்த 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் 5 -வது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார் திலீப். இந்த மனுவை கேரள உயர் நீதிமன்றம் இன்றே விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.