சினிமா

தேனாண்டாள் கம்பெனிக்கு படம் இயக்கும் தனுஷ்

webteam

தேனாண்டாள் கம்பெனிக்கு புதியதாக தனுஷ் ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்தி பரவ ஆரம்பித்துள்ளது.

நடிகராக தன்னை தக்க வைத்து கொண்ட தனுஷ் நேரம் கிடைக்கும் போதேல்லாம் பாடல்கள் எழுதி வந்தார். அத்துடன் அவருக்கு இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என ஆசையும் இருந்து வந்தது. இந்த ஆசையை ‘பவர் பாண்டி’ மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஒரு குடும்ப பாணியினான படம் என்ற அளவில் அந்தப் படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மீண்டும் எப்போது இயக்குநராக களம் இறங்க இருக்குறீர்கள் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கான யோசனை தற்சமயம் இல்லை என்று பதிலளித்திருந்தார் தனுஷ். ஆனால் அவர் மறுபடியும் இயக்குநராக களம் காண உள்ள படத்தை தேனாண்டாள் கம்பெனி தயாரிக்கப் போவதாக செய்தி பரவி வருகிறது. 

தனுஷ் தங்களது கம்பெனி சார்பாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி ட்விட்டரில் ஒரு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் அதில் அவரே கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது. ஆனால் இந்தச் செய்தி பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.