சினிமா

“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு

“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு

webteam

“பிக்பாஸ் ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை” - மதுமிதாவின் கணவர் குற்றச்சாட்டு

பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாதபோது ஏன் இப்படி செய்தார்கள் என தெரியவில்லை என்று மதுமிதாவின் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களாக 16 பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். சாண்டி, லாஷ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

இதனிடையே 16 பிரபலங்களில் ஒருவராக கலந்து கொண்ட நகைச்சுவை நடிகை மதுமிதா தற்கொலை முயற்சி செய்ததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து பிக்பாஸ் குழுவினர் மீது மதுமிதா அடுக்கடுக்காக பல புகார்களை முன் வைத்தார். 

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் மதுமிதா கணவர் கலந்து கொண்டது போன்ற வீடியோ வைரலாகி வந்தது. இந்நிலையில், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதுபோல் வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக மதுமிதாவின் கணவர் மோசஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “என் குடும்பத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏனென்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் இறுதி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது போல் வீடியோ வெளியிட்டுள்ளனர். ஏன் அவ்வாறு செய்தார்கள் எனத் தெரியவில்லை. இது மிகத்தவறு. நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இதற்கு அவர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.