சினிமா

தனுஷின் ‘வாத்தி’: நாயகியாகும் ‘தீவண்டி’ புகழ் சம்யுக்தா மேனன்

sharpana

நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில் நாயகியாக நடிகை சம்யுக்தா மேனன் இணைந்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் இரண்டாவதாக நடிக்கும் பான் இந்தியா படமான ‘வாத்தி’ படத்தில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தீவண்டி’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சம்யுக்தா மேனன் தமிழிலும் ‘களரி’, ‘ஜூலை காற்றில் உள்ளிட்டப் படங்களிலும் நடித்துள்ளார்.

குறிப்பாக, ’தீவண்டி’ படத்தில் டொவினோ தாமஸின் காதலியாக நடித்திருப்பார். டொவினோ தாமஸுக்கும் சம்யுக்தாவுக்குமான‘ஜீவாம்ஷமாய்’ பாடல் பலரின் விருப்பப் பாடலாக உள்ளது. தனது க்யூட் எஸ்பிரஷ்னகளால் கவனம் ஈர்த்திருப்பார் சம்யுக்தா.

தற்போது, பவன் கல்யாணின் ‘பீம்லா நாயக்’ படத்தில் நடித்து வருபவர் தனுஷுடன் ‘வாத்தி’ படத்தில் இணைந்திருக்கிறார். ‘பீம்லா நாயக்’ படத்தை தயாரிக்கும் சித்தாரா எண்டர்டைமெண்ட்ஸ்தான் ‘வாத்தி’ படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், வாத்தி படத்தில் இணைந்திருப்பது குறித்து சம்யுக்தா மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சித்தாரா எண்டெர்டைன்மெட்ஸும் உறுதி செய்துள்ளது. ‘வாத்தி’ படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.