சினிமா

சென்சாரில் வெட்டிய காட்சிகள் வெளியே பரவியது.... அதிர்ச்சியில் நடிகையின் தாயார்!

webteam

சென்சாரில் வெட்டப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் தனது தாயார் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று நடிகை சஞ்சனா கல்ராணி வேதனை தெரிவித்துள்ளார். 

கன்னடத்தில் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தண்டுபாளையா. இப்படத்தின் இரண்டாம் பாகம் கர்நாடகாவில் சமீபத்தில் ரிலீசானது. இந்தப்டத்தில் சஞ்சனா கல்ராணி நடித்திருந்தார். இந்நிலையில், சஞ்சனா சிறையில் இருப்பது போன்றும், கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்துவது போன்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
அந்த வீடியோ  காட்சி 'தண்டுபாளையா 2' படத்துக்காக எடுக்கப்பட்டதாகவும்,  தணிக்கை குழுவுக்கு அனுப்பிய போது,  துண்டிக்கப்பட்ட காட்சிகள் எனவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து  கருத்துத் தெரிவித்துள்ள சஞ்சனா ’ இந்த வீடியோ  எப்படி வெளியானது என தெரியவில்லை. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர், இயக்குனரிடம் கேட்டுள்ளேன். இந்த விவகாரம் பற்றி இன்னும் 5 நாட்களில் முழு விபரங்களை தெரிவிப்பேன்.  இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்து எனது தாயார் அதிர்ச்சியடைந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளார்.