சினிமா

மறுபடியும் ஹீரோவானார் நடிகர் ராம்கி

webteam

மறுபடியும் ஹீரோவாக களம் இறங்கினார் நடிகர் ராம்கி.

‘செந்தூர பூவே’ ‘இணைந்த கைகள்’ என பல ஹிட் படங்களில் நடித்தவர் ராம்கி. சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இப்போது இங்கிலீஷ் படம் மூலம் ஹீரோவாக நடித்திருகிறார். ஜோடியாக மீனாட்சி, ஸ்ரீஜா நடித்துள்ளனர். படத்தை குமரேஷ் குமார் இயக்கியிருக்கிறார். 

அது என்ன இங்கிலிஷ் படம்? 

ஹாலிவுட் படம் போல காட்சிகள் எங்கள் படத்தின் காட்சிகள் யூகிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து மாறி கொண்டே இருக்கும். அதனால் இங்கிலீஷ் படம் என்று வைத்தோம்.ராம்கி வடசென்னை தாதாவாக நடித்திருக்கிறார். அடுத்தவர் வீட்டை ஆட்டையை போடும் ஆளாக அவர் இருப்பார். அவர் வாங்கும் வீட்டில் பேய் இருப்பதாக வதந்தி. அப்புறம் என்ன நடக்கிறது? பேய் என்ன செய்கிறது இதான் கதை. காமெடி கலந்த அலப்பறையான ஹாரர் த்ரிலராக எடுத்திருக்கிறோம்.வரும் அக்டோபர் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என இயக்குநர் கூறியுள்ளார்.