நடிகர் பிரசன்னா முகநூல்
சினிமா

அஜித் ரசிகர்களுக்கு நடிகர் பிரசன்னா சொன்ன குட் நியூஸ்! ’குட் பேட் அக்லி’ படத்தின் புதிய அப்டேட்!

ஆதிக் ரவிசந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் “ குட் பேட் அக்லி”. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதமே தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆதிக் ரவிசந்திரனின் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்துவரும் திரைப்படம் “குட் பேட் அக்லி”. இப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இதன் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிப்பதாக சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், சுனில்,அர்ஜீன் தாஸ் உட்பட பலர் முக்கிய வேடங்களிலும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்தவகையில், படப்பிடிப்பின் அடுத்தக்கட்டமாக, ஸ்பெயினில் அடுத்த 50 நாட்களுக்கு படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அஜித் ரசிகர்களுக்கு சிறப்பான செய்தி ஒன்றினை தெரிவித்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்..

அவர்தான் நடிகர் பிரசன்னா.. குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ள பிரசன்னா.. ”அஜித் சாரின் GOOD BAD UGLY படத்தில் நடிக்கிறேன். தல படத்தில் என்னை பார்க்க விரும்பிய பலரின் ஆசை கடைசியாக நிறைவேறியது. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. சில தினங்களாக தான் படப்பிடிப்பில் கலந்திருக்கிறேன். ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், அவர் (அஜித்) பணிவும், தன்னடக்கமும் நிரம்பிய மனிதர்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தவகையில், விடாமுயற்சியின் அப்டேட்டை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, “ குட் பேட் அக்லி” திரைப்படத்தின் அப்டேட் வந்திருப்பது... இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம்.