சினிமா

ஹீரோக்களுக்கு மட்டும் கோடிகளில் சம்பளமா? ராதிகா ஆப்தே பாய்ச்சல்

ஹீரோக்களுக்கு மட்டும் கோடிகளில் சம்பளமா? ராதிகா ஆப்தே பாய்ச்சல்

webteam

தமிழில், வெற்றிச்செல்வன், தோனி, அழகுராஜா, கபாலி ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. 

அவர் கூறும்போது, ‘ஹீரோக்களுக்கும் ஹீரோயினுக்கும் ஒரே மாதிரியான வேலைதான் சினிமாவில். ஆனால், ஹீரோக்களுக்கு மட்டும் நடிகைகளை விட அதிகமாக, கோடிகளில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. நடிகைகளிலும் பல சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த ஸ்டேட்டஸ் கிடைத்திருக்கிறது. ஹீரோயின்களை, சூப்பர் ஸ்டார்களாக ஏற்றுக்கொள்ள, ரசிகர்களும் தயாராக இல்லை. இந்த சமூகத்தின் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது’ என்ற ராதிகா ஆப்தே, இப்போது பிரேக்கில் இருக்கிறாராம்.