சினிமா

நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

webteam

நடிகை பாவனா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நடிகர் திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

பிப்ரவரி மாதம் 17-ம் தேதி, கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, பாவனா கடத்தப்பட்டார். காரிலேயே பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். அடுத்த சில நாட்களில் அந்த கார் டிரைவர் மார்ட்டின் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக, நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டார். 

கொச்சி அங்கமாலியில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்புக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை நாளை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.