சினிமா

"800 படத்தில் இருந்து விலகிக் கொள்ளுங்கள்": முத்தையா முரளிதரன்

webteam

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்கை வரலாறு படத்தில் இருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

"என் மீதான தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சில தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே என்னால் தமிழ்நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், "விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத் தலைமுறையினருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு உத்வேகத்தையும் மன உறுதியையும் அளிக்கும் என எண்ணியே எனது சுயசரிதையை திரைப்படமாக்க சம்மதித்தேன்" என்றும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.