சினிமா

’சங்கமித்ரா’கைவிடப்படவில்லை: சுந்தர் சி விளக்கம்

’சங்கமித்ரா’கைவிடப்படவில்லை: சுந்தர் சி விளக்கம்

webteam

ஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் சங்கமித்ரா திரைப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.

சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, சிவா, நிக்கிகல்ராணி, கேத்ரின் தெரசா என்று ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் கலகலப்பு-2. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி, சங்கமித்ரா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 

சரித்திர பின்னணியில், பிரமாண்ட பொருட்செலவில் ஆர்யா, ஜெயம்ரவி நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கயுள்ளதாக கடந்த வருடம் சுந்தர்.சி அறிவித்திருந்தார். இந்தப் படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், இந்தத் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் இதற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்று இயக்குனர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். மேலும், படத்திற்கான தொழில்நுட்ப பணிகளின் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.